தொடர்ச்சியான தொலைபேசி மிரட்டல்களால் தான் நிலைகுலைந்து போயுள்ளதாகவும் தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நடிகர் சூர்யா தான் பொறுப்பு என நடிகை மீரா மிதுன் பரபரப்பு கருத்தை பதிவிட்டுள்ளார்.
தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த மீரா மிதுன் மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் பிக் பொஸ் நிகழ்ச்சியிலம் பங்கேற்று பிரபலமாகியிருந்தார்.
அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் திரிஷா தன்னை கொப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல் ரஜினி, விஜய், தனுஷ் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
அண்மையில் நடிகர் சூர்யா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த மீரா மிதுன், அதில் சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது. சாதாரண காட்சிக்கு கூட 20 டேக் வாங்குவார். ஆக்டிங்கிற்கு என்ன ஸ்பெல்லிங் என கேட்பவர் என சூர்யாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் சூர்யா, விஜய் ரசிகர்கள் தன்னை தொடர்ந்து போனில் மிரட்டி வருவதாக மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது: சூர்யா, விஜய் ரசிகர்களிடம் இருந்து, மோசமான மெசேஜ்கள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன.
உங்கள் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா. 80க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. என் மொபைல் எண்ணை, பல்வேறு குழுக்களுக்கு பரவ விட்டுள்ளனர். எனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பு. இது என்னை உறுதியற்ற நிலைக்கு துாண்டுகிறது. என அவர் கூறியுள்ளார்.